இந்தியா
கழிவறைக்குள் பதுங்கி இருந்த பாம்பு- வீடியோ வைரல்
- வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
- பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டம் அகில்யா நகரை சேர்ந்தவர் சர்ப்மித்ரா சிடல்காரா என்கிற சிட்டு. இவர் பாம்பு பிடிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர்.
அந்த வகையில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் கழிவறையில் இருந்து பாம்பு வெளியே வர முயற்சிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அந்த பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
Next Story