என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது
    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரேசர் மெக்கர்க்- பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    3-வது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் மெக்கர்க் 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கர்க் 15 பந்தில் அரைசதம் விளாசினார். மேலும் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது.

    5-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் இரணடு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 20 ரன் கிடைத்தது.

    6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி அணி பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 7-வது ஓவரில் பொரேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்கர்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஓவர் த்ரோ மூலம் ஐநது ரன்கள் கிடைக்க டெல்லி 21 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மெக்கர்க் ஆட்டமிழந்தார். மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி 7.3 ஓரில் 114 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ரன் உயர்வு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பொரேல் 27 பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 12 ஓவரில் 150 ரன்னைத் தாண்டியது. ஷாய் ஹோப் ஐந்து சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.1 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரை வுட் வீசினார். இந்த ஓவரில் ஸ்டப்ஸ் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் விறாசினார்.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இநத் ஓவரில் ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
    • பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.

    இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
    • மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.

    2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

    லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.

    இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
    • அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

    பஹ்ரைன்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.

    மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
    • நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

    "காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.

    அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.

    நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

    நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.

    'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?
    • திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா? கிழக்கு கடற்கரை சாலைக்கு வெறும் ஜாலியாக மட்டும் செல்லாமல், திருவிடந்தை சென்று ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்திய கல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளி பொருந்தியதாக மாறும்.

    திருவிடந்தை கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது. பிராட்வேயில் இருந்து பிபி-19, தி.நகரிலிருந்து ஜி-19 பஸ்கள் செல்கின்றன.

    இந்த ஊரின் பெயர் நித்திய கல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்ய கல்யாணப் பெருமாள். கோவில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர், கல்யாண தீர்த்தம்.

    ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

    பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 'கல்யாணம் ஆகாதவங்க ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இங்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் போதும், ஒரு மாதத்துலயே கல்யாணம் நிச்சயம் ஆயிடும். வரவங்க ரெண்டு மாலைகளை வாங்கிட்டு வரணும். அர்ச்சனை பண்ணி ஒரு மாலையைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள். இன்னொண்றை கழுத்துல போட்டுக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க பிரகாரத்தைச் சுற்றிவரணும். அப்புறமா அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய், சாமி படத்துக்கிட்ட வச்சு வணங்கினாப் போதும். கல்யாணம் நிச்சயமாயிடும்.

    திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்?


    அதற்கான புராண வரலாறு வருமாறு:-

    பண்டைய காலத்தில் திருவிடந்தைக்கு அக்காலத்தில் மேகநாதன் என்ற அசுரன் இருந்தான். அவனது மகன் பலிச்சக்கரவர்த்தி.

    இந்த பலிச்சக்கரவர்த்தி உலகினைத் தர்ம சாஸ்திரத்தின்படி, முறையாக ஆட்சிபுரிந்து வந்தான். இவனது நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூவரும் தேவர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர். தனது நண்பர்களுக்காக பலிச்சக்கரவர்த்தி தேவர்களுக்கு எதிராக போரிட நேரிட்டது.

    இதனால் ஏற்பட்ட பாவத்தினைப் போக்க பலிச்சக்கரவர்த்தி திருவிடந்தையில் தவம் புரிந்தான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பலியின் முன்பு தோன்றி அவனுக்கு வேண்டிய வரம்களை அளித்தார். இவ்வூரின் அழகில் மயங்கிய இறைவன் திருவிடந்தையிலேயே தங்கிவிட்டார்.

    திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் முனிவர் ஒருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

    நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார்.

    முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்றுவிட்டாள் அவரது மனைவி. அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவடந்தைக்கு வந்தார்.

    இங்கே அருள்பாலிக்கும் வராக மூர்த்தியை வணங்கினார். தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்கும் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர் தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி.

    முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார். தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார். பெருமாள். கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அனைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடத்து பக்கத் திருத் தொடையில் வைத்துக் கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப் போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

    360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவள்ளி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவள்ளிஎன்றே பெயர். 'திரு' (லட்சுமியை) தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால் இந்த ஊருக்கு 'திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது.

    தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்று விடுகிறது.

    திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும்.


    இரண்டு மாலைகள் வாங்க வேண்டும். ரோஜா மாலையாக இருந்தால் நல்லது. அர்ச்சகர் அந்த மாலைகளை தாயாருக்கு அணிவித்து பரிகாரம் செய்யப்பட வேண்டியவரின் பெயரில் அர்ச்சனை செய்வார். பிறகு இரண்டு மாலைகளில் ஒரு மாலையை மட்டும் எடுத்து வந்து தருவார்.

    அதை திருமணத்துக்கு உரியவர் தானே தனது கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்தை 9 முறை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது விரைவில் தனக்கு நல்ல இடத்தில் திருமணம் கைக்கூட வேண்டும் நித்திய கல்யாணப்பெருமாளிடம் மனமுருக வேண்டிகொள்ள வேண்டும்.

    9 தடவை பிரகாரத்தை சுற்றி முடித்ததும், கொடிமரம் அருகில் வந்து சாஷ்டாங்மாக விழுந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலையை தானே கழற்றி எடுக்கவேண்டும். அதை ஒரு பைக்குள் பத்திரமாக வைத்து வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் அந்த மாலையை பூஜை அறை விசாலமாக இருந்தால் அங்கே வைத்துவிடலாம். அல்லது சுற்றில் அணியில் அடித்து அதில் தொங்கவிட்டுவிடலாம்.

    தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமிக்கும்பிடும் போது குலதெய்வத்தை வணங்கிவிட்டு நித்தியகல்யாணப்பெருமாளையும் மனத்திற்குள் நினைத்து வழிபட வேண்டும். அந்த பெருமாளின் அருளால் நிச்சயம் விரைவில் திருமணம் கைக்கூடிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக திருமணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் இது நடந்து உள்ளது.

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு சமம் என்று கூறலாம். 108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான். தம்பதி சமதேராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை சாதிப்பதால், இங்கே வந்து நித்ய கல்யாணப் பெருமாளை வணங்கினால் உங்கள் ராகு, கேது தோஷங்களும் நீங்கிவிடும். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப்பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது.
    • எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம் துறவு என்பது எதையும் விட்டு விடுவது அல்ல, இருப்பதை அப்படியே ஏற்று கொண்டு வாழ்வது என்பது உண்மையான துறவின் இலக்கணம் ஆகும். இதை நிஷ்காமிய கர்மம் என்கிறது கீதை. இதை இன்னும் நாம் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் "உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு துறவு" என்கிறார்.

    எனக்கு எது எப்படி, எங்கு, எவ்வாறு அமைந்ததோ, அது இறைவன் சித்தம். அதை நான் ஏற்று கொள்கிறேன் என்கின்ற மன பக்குவத்தோடு வாழ வேண்டும். ஏனென்றால் நாம் யாரும், இந்த உலகத்திலே, நான் இந்த தாய், தந்தைக்கு மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? பிறப்பு என்பதே நம் கையில் இல்லை. அப்படி என்றால் எதுவும் நம் கையில் இல்லை. அது, அது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நடக்கிறது.

    எனவே, இந்த உலகில் யாரையும் மாற்றுவதற்காக நான் பிறக்கவில்லை. என்னை நானே முதலில் மாற்றி கொள்ள வேண்டும். என் மாற்றத்தை பார்த்து தான் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் மாறுவார்கள். ஆனால் நாம் மாறாமல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் வருகிறது.

    ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையானது, பிறக்கும் போது நம்மோடு சேர்ந்து வந்தது இன்பம், துன்பம் என்கின்ற இந்த இரண்டு உணர்வுகள். அதை அப்படியே ஏற்று கொள்வது தான் ஞான வாழ்க்கை. உண்மையான சந்நியாசம், இந்த நிலையில் இருந்து நாம் அறியப்படும் பொருளை அதாவது ஆன்மாவை அறிய முற்பட வேண்டும்.

    நாம் சாதாரண மனிதர்கள் அல்ல, நாம் மனம் கொண்ட ஈசனாய் இருப்பதால் தான் நமது பெயர் மனுசன். அந்த ஈசனுக்கு உடல் இல்லை. இந்த மனிதர் என்கின்ற ஈசனுக்கு உடல் உண்டு. எனவே, இந்த பிரபஞ்சம் என்பது ஒரு பிரம்ம பீடம்.

    நாம் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் மிகவும் உன்னதமானது. நாம் இங்கு வந்திருக்கிறோம் என்றால், நம்மிடம் அதற்கான தகுதியும், தரமும் இறைவன் கொடுத்து தான் நம்மை ஒரு தாயின் வயிற்றில் கருவிலே உருவாக்கி இருக்கிறான். அந்த தகுதி நமக்கு இல்லையென்றால், நாம் இன்னும் பல பிறவிகள் ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்காக தான் பிறவியில் இருப்போம்.

    எனவே நாம் ஒவ்வொருவரும் இறை தன்மை பெற்றவர்கள். இதை நாம் உணர்வதே, ஞான வாழ்வின் நோக்கம். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனித வாழ்வின் நோக்கம் அறநெறி படி வாழ்ந்து இறையுணர்வு பெறுதல் என்கிறார். இதற்கு முதல் வழி, தன்னையறிதல் ஆகும்.

    வாழும் காலத்திலே தன்னையறிதலுக்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று தவம் மற்றொன்று மவுனம் ஆகும். தவத்தின் வழியாக (தியானம்) புலன்களின் மூலமாக மனதை அறிய முடியும். ஆனால் மவுனத்திலே, மனதின் எஜமானாகிய ஆன்மாவை அறியமுடியும். இதை தான் திருமூலர் அவர்கள்,

    "தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை

    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

    தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

    தன்னை தானே அர்ச்சித்தானே" - என்கிறார்.

    இதையே மகரிஷி அவர்கள், மனதை அறிந்தால் தான் அதன் மூலத்தை அறியலாம் என்கிறார். எனவே மனதை அறிவது தவம். அதை பற்றிய ஆய்வே மவுனம் ஆகும். எனவே உன்னில் தேட உள்ளது கிடைக்கும் என்று மகான்கள் கூறுகிறார்கள்.

    இந்த ஞான வாழ்க்கையை வேதத்திரி மகரிஷி அவர்கள், ஒரு மனிதர் வாழும் காலத்திலேயே முதலில் தன்னை உணர வேண்டும். அப்படி அறிந்தால் தான், தன் குறைகளை நம்மால் உணர முடியும். அப்படி உணர்ந்தால் தான் அந்த குறைகளை திருத்தம் பெற வழி செய்யமுடியும். அப்படி வழி செய்தால் தான் வகுத்தபடி வாழ முடியும் என்கிறார். இந்த நிலை வருவதற்கு நம்மை நாமே பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்




    ஏனெனில், வாழ்க்கையில் நாம் கற்பனை செய்வது ஒன்று, ஆனால் இறைவன் கொடுப்பது வேறு ஒன்று. ஆனால், வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், சந்தோஷமாக இருக்க அல்லது மனம் சம நிலையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் அப்படி இல்லை என்று நமது பலவீனம் சொல்கிறது. அதாவது சாஸ்திரம் முடியும் என்கிறது. நமது பலவீனம் முடியாது என்கிறது. இதில் சாஸ்திரம் சத்தியமா? அல்லது நமது பலவீனம் சத்தியமா? நம்மை பொறுத்தவரை பலவீனம் தான் சத்தியம் என்று நாம் சொல்லுவோம்.

    ஏனெனில் எது நடந்தாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடிவது இல்லை. நாம் எல்லாம், நமது வாழ்க்கையிலே நாம் எதிர்பாப்பது போல் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. நாளை ஏதோ ஒன்று கிடைக்க போகிறது என்கின்ற ஒரு எதிர்பார்ப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவன் வேறு விதமாக நம்மிடம் விளையாடுகிறான். இதை சித்தர் பாடலிலே

    "உலகத்தை உருட்டி திரட்டியவன் அவன்

    எனக்கு உயிர் கொடுத்தவன் அவன்

    வாழும் காலத்திலே அகத்திலே உணராததால்

    வாழ்க்கை எனும் சக்கரத்திலே என்னை

    செக்கு மாடாய் சுழற்றியவன் அவன்" - என்கிறார்கள்.

    அதாவது செக்கு மாடு என்ன செய்யும்.. ஒரு செக்கு கடையை வைத்து இருக்கும் முதலாளி ஆனவர், அந்த செக்கு இயந்திரத்திலே தேவையான பொருட்களை போட்டு மாட்டை சுற்ற விடுவார், மாடு தானாக சுற்றாது. அதன் இரண்டு கொம்புகளுக்கு இடையே ஒரு கீரை கட்டை கட்டி விட்டு மாட்டை ஓட்டுவார். மாடு அந்த கீரை கட்டை பிடிப்பதற்கு நாக்கை மேல் நோக்கி நீட்டி கீரையை பார்த்து கொண்டே செல்லும். மாட்டின் கவனம் கீரையின் மேல்.. முதலாளியின் கவனம் செக்கு எண்ணெய் ஆட்டுவதிலே இருக்கும். அந்த எண்ணெய் தயாராகும் வரை மாட்டால் கீரையை தின்ன முடியாது. அது போல இறைவன் நம்மிடம் கீரை கட்டு போன்ற எதிர்காலம் என்கின்ற வாழ்வை நம் முன் காட்டி, அந்த மாயையில் சிக்க வைத்து, அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை செல்கிறது.

    கடந்த காலத்தை பற்றி நாம் பேசும் போது கர்வம் ஏற்படுகிறது. எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது பயம் ஏற்படுகிறது. இதனால், நிகழ்காலத்திலே, நமக்கு உள்ளே ஆனந்தம் என்கின்ற ஒன்று உள்ளதை அறியவிடாமல் மாயை மறைத்து விடுகிறது. இதுவே ஆன்மாவை உணர்வதற்கு தடையாக உள்ளது.

    எனவே வாழ்க்கையில் நமக்கு எது நடந்தாலும், இறைவனை தியானிப்பதை விட்டுவிடக் கூடாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கிராமத்திலே, தலையிலே தண்ணீர் குடம் ஒன்றையும், இடுப்பிலே தண்ணீர் குடம் ஒன்றையும் பெண்கள் வைத்துக் கொண்டு, தன் தலையில் இருக்கும் குடத்தை பிடிக்காமல், குழுவாக பேசி கொண்டே வருவார்கள். ஆனால் ஒரு துளி நீர் கூட கீழே சிந்தாது. அவர்கள் கண்கள் பாதையின் மீதும், புற உலகின் மீதும் இருந்தாலும், முழு கவனமும் தண்ணீர் குடத்தின் மீதே இருக்கும். அது போல நாமும், வாழ்க்கையில் எவ்வளவு துயரமும், துன்பமும் வந்தாலும், இறைவனை நினைப்பதை விடவே கூடாது. இதுவே ஞான வாழ்க்கையாகும்.

    அன்னை சாரதா தேவி வாழ்க்கையை படித்து பார்த்தால், நமக்கு தெரியும். அவர்கள் ராமகிருஷ்ணருடைய மனைவியாக இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று. அது போல அன்னை லோகாம்பாளை பற்றி படித்தால், அவர்கள் வேதாத்திரி மகரிஷியினுடைய மனைவியாக இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று தெரியும். அவர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது, நம் வாழ்வில் கஷ்டங்கள் ஒன்றும் பெரிது இல்லை என்பது விளங்கும்.

    வாழ்வில் எது வரும் என்று நமக்கு தெரியாது. வாழ்க்கை ஆனது எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய் முடியும். ஒரு சிலர் சிறு வயதிலேயே ஞான வாழ்க்கையை பற்றி பேசுவர். எதிர்காலத்திலே அவர் ஒரு சிறந்த ஞானியாக உருவாவார் என்று எதிர்பார்த்தால் அவர் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார். ஒரு சிலரோ சதாரண குடும்ப வாழ்க்கையிலே எந்த வித சலனமும் இல்லாமல் இருப்பார். எதிர்காலத்திலே ஞானியாக உருவெடுப்பார்.

    எனவே, ஞான வாழ்க்கையிலே அறியப்படும் இறைவனை, அறியவராகிய நாம், முதலில் வாழ்க்கையில் எதையும் எதிர்பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும்.

    சந்தோஷத்தை தவிர எதையும் நம்மால் வாங்க முடியும். வெளியே மனதை விட்டால், அது மாறிக் கொண்டே இருக்கும். மனக்கதவை திறந்து விட்டால், நாம் இறைவனிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் நமக்கு தேவை என்பது இல்லை. அதற்கு காரணம், கேட்பதும், அதற்கு பதிலும் அவரே. அங்கு இரண்டு அல்ல , எல்லாம் அந்த ஒன்றே நடத்தும். அதில் நடப்பது நடக்கும். நாம் கடமைகளை மட்டும் செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு ஆரோக்கியம் ஏற்படும். அது போல மனம் எந்த அளவிற்கு எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது தான் மனதிற்கு ஆரோக்கியம்.

    இதற்கு முதல் தடையாக இருப்பது 'நான்' மற்றும் 'எனது' என்கின்ற நமது எண்ணங்களே. இந்த இரண்டிலும் நமக்கு இன்பம் மற்றும் துன்பத்தை தவிர வேறு அனுபவம் ஏற்பட்டு இருக்காது. எனவே ஞான வாழ்க்கை வாழ்வதற்கு, துன்பத்தை நீக்கி இன்பத்தை மட்டும் அறியும் வாழ்க்கை எப்படி என்பதை ஆராய்ச்சி செய்வோம்.

    போன்: 9444234348

    ×