என் மலர்

    புதுச்சேரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
    • டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

    குறிப்பாக மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், சாலையின் இருபுறமும் உள்ள குறுகலான தெருக்களுக்கு பொது மக்கள் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை குறுக்காக ரோட்டை மறித்து கடந்து செல்வதுதான்.

    இதனிடையே சமீபத்தில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்திய கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சாலை விரிவாக்கம் தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒரே வழி என்ற போதிலும் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி உள்ளதா? என்ற ஆய்விலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நேற்று இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள், எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன? என்பன போன்ற விவரத்தை அவர்கள் பதிவு செய்தனர்.

    குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து கொம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் நோக்கி வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என்பது தொடர்பாக அவர்கள் டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
    • புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பஸ் போக்குவரத்து முடங்கியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்துறையின் வரவு, செலவு திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

    புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டிலும் புதுச்சேரி அரசின் மின்துறை ஒழங்குமுறை ஆணையத்திடம் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்து, சுமார் ரூ.120 கோடி பற்றாக்குறையை சரிகட்ட மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரியது.

    இதன்பேரில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதாலும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாலும் அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமல்படுத்தப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது.

    தேர்தலுக்கு பிறகு ஜூன் 16-ந் தேதி முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஊர்வலம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து முதல் 200 யூனிட்களுக்கு ரூ.85 பைசா அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

    இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகளான 'இந்தியா கூட்டணி' மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று மாநிலம் தழுவிய 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. 'பந்த்' போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

    இதன்படி இன்று காலை 6 மணிக்கு 'பந்த்' போராட்டம் தொடங்கியது. 'பந்த்' போராட்டத்தையொட்டி அதிகாலை முதல் புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலுமாக ஓடவில்லை.

     

    பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி புதுச்சேரி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது

    பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி புதுச்சேரி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது

    புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோ, டெம்போக்கள் ஓடியது. கல்லூரி பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம்போல கல்லூரிகளுக்கு சென்றனர்.

    புதுச்சேரியிலிருந்து இயங்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளான கன்னிய கோவில், கோரிமேடு, கனக செட்டிகுளம் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கினர்.

    ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரி வந்து சென்றது. பஸ்கள் இயக்கப்படாததால் புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. புதுச்சேரி அரசு பஸ்கள் ஒரு சில இயக்கப்பட்டது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்களில் பயணிகள் ஏறி மாநில எல்லைக்கு சென்று வெளியூர் சென்றனர்.

    'பந்த்' போராட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே 1 முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.

    அதே நேரத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நகரத்தின் பிரதான பஜார் வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சிவீதி, மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, திருக்கனூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்பட புறநகர், கிராமப் புறங்களிலும் இதே நிலை நீடித்தது.

    தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. கடலூர் சாலையில் வணிக வளாகம் திறக்கப்படவில்லை. தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பெரிய மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள் இயங்கவில்லை.

    ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 'பந்த்' போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடைகள் திறக்கப்படாததாலும், பஸ்கள் ஓடாததாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், மறைமலை அடிகள் சாலை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய தூதரக அதிகாரிகள் உடலை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • வாலிபரின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்காவின் ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி, குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

    இதற்கிடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 21-ந்தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவற்று இருந்தனர். அவர்களை அங்குள்ள தமிழர்கள் பராமரித்து வந்தனர். பின்னர் அந்த குழந்தைகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே உயிரிழந்த பாலசுப்பிரமணியன் அமெரிக்காவில் கடந்த 2013-ம் ஆண்டு பீட்டி என்ற அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விவகாரத்து செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் முதல் மனைவியான பீட்டி, பால சுப்பிரமணியனின் ஆதரவற்ற 3 குழந்தைகளையும் தானே தத்தெடுத்து வளர்ப்பதாக தெரிவித்தார். அதன்படி அவரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே சவுமியாவின் உடல் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்பிரமணியன் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர அவரது தாய் மற்றும் உறவினர்கள் புதுவை முதல்-அமைச்சர், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் உடலை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதைதொடர்ந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் உதவியுடன் பாலசுப்பிரமணியன் உடல் 25 நாட்களுக்கு பிறகு நேற்று கார்க்கோ விமானம் மூலம் சென்னை வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு பாலசுப்பிரமணியன் உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.
    • நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளிலும் நடந்தது.

    இதற்காக புதுச்சேரியில் 15 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வும் செயல்பட்டது.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 6 ஆயிரத்து 305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 857வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை, நஷ்டஈடு, நிவாரணம் என மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்து 756 உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்புவதுதான் வழக்கம். ஜூன் மாதம் முதல் விட்டு விட்டு மழை பெய்யும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

    ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஜூலை மாதம் வரை புதுவையில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    கடந்த மாதம் ஒரு சில நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆவலுடன் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை காலம்போல புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் வெப்பம் 100 டிகிரியை நெருங்கியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடித்தது. இருந்தபோதிலும் வெயிலின் அளவு 98.24 டிகிரி என்றே பதிவாகியிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

    கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
    • மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையையொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார்.

    போதை தலைக்கேறிய மாணவிக்கு திடீரென தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவி, தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரும், இந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவருக்கு பிறந்தநாள் என்பதால், அவர் சக மாணவர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார்.

    இதில் மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த மாணவியை அவரது வீட்டுக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகளுக்கு மது வாங்கி கொடுத்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

    இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
    • நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    புதுவை இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை பிரிவுக்கு, கிருமாம்பாக்கம் அருகே உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு சுமார் 96 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.

    இதில், ஐ.ஆர்.பி.என். பட்டாலியன் போலீசாருக்கு, தலைமையகம், குடியிருப்புகள், பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த திட்டத்திற்கு, நரம்பை மீனவ கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இருப்பினும் அதனையெல்லாம் மீறி, பட்டாலியன் போலீசார் டெண்ட் கொட்டகை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே அப்போது பதவியில் இருந்த அமைச்சர், மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக வலியுறுத்தி வந்தார்.

    இது தொடர்பாக கவர்னர், போலீஸ் உயர் அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீனவ மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல் கட்சிகள் தேர்தலின் போது, நரம்பை கிராமத்தில் பட்டாலியன் மையம் வராது என வாக்குறுதி அளித்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் பல ஏக்கர் நிலம் சுற்றுலா துறைக்கும், உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது. மீதமிருந்த இடத்தை நரம்பை கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்தி கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பட்டாலியன் படை கட்டுமான பணி கைவிடப்பட்டது என நம்பி இருந்தனர்.

    இந்நிலையில் புதுவை பட்டாலியன் போலீசார், அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, துணை கமாண்டன்ட் சுபாஷ், உதவி கமாண்டண்ட் ரிஸ்வா சந்திரன், செந்தில் முருகன், ராஜேஸ் மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் இன்று காலை நரம்பை கிராமத்திற்கு வந்தனர்.

    இதனையறிந்த, நரம்பை கிராம மீனவமக்கள், அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த நிறுத்தி, ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதட்டமாக காணப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டாலியன் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    இதனால் எம்.எல்.ஏ.வுக்கும், பட்டாலியன் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து, பட்டாலியன் போலீசார் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பினர். தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மீனவ மக்களிடம் பேசியதாவது:-

    கடந்த பட்ஜெட்டில் கூட, முதல்-அமைச்சர் ரங்கசாமி, இங்கு கடல் சார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சுற்றுலா திட்டம், மீன் வளம் துறையின் மூலமாக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இருந்தது.

    இந்த பிரச்சினை மீண்டும் வராத அளவிற்கு, ஒரு நிரந்திர தீர்வு கிடைக்க துணையாக நிற்பேன். இது தொடர்பாக, ஊர் பஞ்சாயத்தாருடன், முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சரரை சந்தித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதன்பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முன்தேதியிட்டு கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இந்த மானியம் கண்துடைப்பு மோசடி என இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    ×