என் மலர்

    ஆந்திர பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாம் பிட்ரோடா தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்று உள்ளனர் எனத் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழர்களின் பெருமையை பற்றி பேசும் திமுக தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ளுமா?- மோடி

    காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது "நாட்டு மக்களை அவர்களுடைய நிறங்களால் அவமதிப்பதை நாடு பொறுத்துக் கொள்ளாது. இதை மோடி ஏற்றுக் கொள்ளமாட்டார்" எனத் தெரிவித்திருந்தார்.

    ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது சாம் பிட்ரோடா, தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்று உள்ளனர் என கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

    தமிழர்களின் பெருமையை பற்றி பேசும் திமுக தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ளுமா?. கூட்டணியை முறிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கிறதா?. பிரித்தாள்வதுதான் காங்கிரஸ் கட்சியின் மனநிலையாக மாறி வருகிறது. என் நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
    • சிரஞ்சீவியின் வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு.

    திருப்பதி:

    ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவருடைய தம்பி நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் என்னுடைய தம்பி தன்னை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.

    ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பவன் கல்யாண் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க தனது சொந்த பணத்தை செலவழித்து, நமது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்தார், மீனவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் பார்க்கும்போது, இவரைப் போன்ற ஒரு தலைவர் மக்களுக்குத் தேவை என்று உணர்கிறோம்.

    தனது வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளார் சட்டமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

    இந்த வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரமாநிலம் ராஜமகேந்திர வரம் அனக்கா பள்ளி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

    இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

    நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளக்கூடிய சாதனைகள்.

    நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறிதான் வாக்கு கேட்கிறோம். இந்திய மக்களுக்காக 10 வருடங்கள் உழைத்தோம். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.

    4 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தன. தற்போது அந்த நீளம் 8000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்துள்ளது. இது இரு மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த மோசடிகள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் 10 வருடங்களில் பல்வேறு மோசடிகளை செய்தார்கள். எந்திரங்களால் கூட எண்ண முடியாத அளவிற்கு பணத்தை குவித்து வைத்துக்கொண்டு அலறுகிறார்கள்.

    தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பண மலை ஒன்று சிக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் இளவரசர் பதில் சொல்ல வேண்டும். ஆந்திர மாநிலத்தில் என்.டி ராமராவ் ராமர் கதாபாத்திரத்தின் மூலம் வீடு வீடாக ராமரின் புகழை கொண்டு சென்றார்.

    அயோத்தியில் 400 ஆண்டுகால கனவை தற்போது நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் தலைவர்கள் பக்தியுடன் கோவிலுக்கு சென்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    சந்திரபாபு நாயுடு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஆந்திர மக்களுக்கு மோடியின் உத்தரவாதம் சந்திரபாபு நாயுடுவின் தலைமை பவன் கல்யாணின் நம்பிக்கை இருக்கிறது.

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை எந்திர ஆட்சி அமைந்தால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணிகளும் விரைந்து முடிவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குபதிவு .
    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்குபதிவு நடக்கிறது. தற்போது அங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

    கோணசீமா மாவட்டத்தில் தபால் ஓட்டு வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் வெள்ளி காசுகளை சில அதிகாரிகள், ஆசிரியர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதியை மீறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அவர் ராஜ மகேந்திரவரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மதியம் 3.30 மணிக்கு ராஜ மகேந்திரவரம் தொகுதியில் உள்ள வேமகிரி என்ற இடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

    இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனக்கா பள்ளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.எம். ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆந்திராவில் வருகிற 13-ந் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக தொடர்ந்து 4 பொதுக் கூட்டங்களில் மோடி பேச உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடிக்கு ஆதரவு.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.

    ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சுற்று பயணத்தின் அங்கமாக அம்மாநிலத்தின் தர்மவரம் பகுதியில் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துரைக்கிறது."

    "இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெறப்போகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது..," என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து பிரசாரம்.
    • டிஜிட்டல் போர்டுகள் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது.

    திருப்பதி, மே.5-

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் பல்வேறு வகையில் நூதன தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து வாலிபர்களின் முதுகில் தொங்கவிட்டு தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    பகலில் சாதாரணமாக காணப்படும் டிஜிட்டல் போர்டுகள் இரவு நேரங்களில் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது. இரவு நேரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக கொண்டு செல்லும்போது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.
    • இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    இதனால், கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. மாட வீதிகள் அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் 10 லட்சத்து ஆயிரத்து 116 கோவிந்த நாமங்களை பக்தியுடன் எழுதிக் கொண்டு வந்து காண்பித்தார்.

    அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வி.ஐ.பி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மேலும் 22-ந் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள்.ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.08 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 39.73 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

    94.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் சாமி உண்டியலில் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இன்று காலையில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் கடத்தல்.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெடிகட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை கண்ட போலீசார் அவரது வயிறு வீங்கியபடி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

    வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்ட வாலிபர் திருத்திருவென விழித்தார். வாலிபரை அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்தனர்.

    வாலிபரின் ஆடைகளில் ஆங்காங்கே பித்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தார்.

    இதனை கண்டு போலீசார் திகைத்து போயினர். ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் இருந்தது. பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் நகை பணத்தை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
    • அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற 7-ந்தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அனக்காபள்ளியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அங்கிருந்து ராஜமுந்திரி செல்லும் பிரதமர் மோடி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மாநில தலைவர் புரந்தேஸ்வரியை ஆதரித்து பேசுகிறார்.

    8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

    இதேபோல் வருகிற 7-ந்தேதி கடப்பாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும் கடப்பா பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஒய் எஸ் சர்மிளாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ×