என் மலர்

    இந்தியா

    ஆந்திராவில் நூதன முறையில் டிஜிட்டல் பிரசாரம்
    X

    ஆந்திராவில் நூதன முறையில் டிஜிட்டல் பிரசாரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து பிரசாரம்.
    • டிஜிட்டல் போர்டுகள் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது.

    திருப்பதி, மே.5-

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் பல்வேறு வகையில் நூதன தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து வாலிபர்களின் முதுகில் தொங்கவிட்டு தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    பகலில் சாதாரணமாக காணப்படும் டிஜிட்டல் போர்டுகள் இரவு நேரங்களில் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது. இரவு நேரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக கொண்டு செல்லும்போது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    Next Story
    ×