என் மலர்

    புதுச்சேரி

    அனைத்து சிக்னல்களிலும் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா?
    X
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அனைத்து சிக்னல்களிலும் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது
    • சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவையில் கடந்த ஆண்டுகளில் இல்லாததைவிட தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 98.6 டிகிரி என பதிவானது. நேற்று 100.4 டிகிரியாக வெயில் பதிவானது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது.

    வழக்கத்தை விட காலை 10 மணிக்கு மேல் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மே தின விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் தகிக்கும் வெயிலால் தவித்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது.

    சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Next Story
    ×