என் மலர்

    தமிழ்நாடு

    காங்கிரஸ் 30 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. 10 ஆண்டில் செய்துள்ளது: ராஜ்நாத் சிங் பெருமிதம்
    X

    காங்கிரஸ் 30 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. 10 ஆண்டில் செய்துள்ளது: ராஜ்நாத் சிங் பெருமிதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வும், காங்கிரசும் வாரிசு அரசியல் நடத்துகின்றன.
    • மோடி 3வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி என்றார் ராஜ்நாத் சிங்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங், திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பின், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்றவாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:

    தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 30 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அதனால் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர்.

    2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு வந்து உள்ளது. 2027-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3-வது இடத்திற்கு வருவது உறுதி.

    கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மோடி 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.

    தமிழகத்தில் உள்ள தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் கூட்டணி அமைத்து தங்களது குடும்பம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்றனர்.

    நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, நமது விமானப்படை, தரைப்படை உள்ள அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கது. நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.

    பிரதமர் மோடி தலைமையில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய நாடாக மாறும். எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×