என் மலர்

    தமிழ்நாடு

    ரூ.7.86 கோடி மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
    X

    ரூ.7.86 கோடி மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

    சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×