என் மலர்

    தமிழ்நாடு

    உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி
    X

    உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.
    • திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பிரித்தாளும் அரசியலை திமுக செய்து வருகிறது.

    * மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வகையில் கருத்துகளை பரப்புகிறது திமுக.

    * முழு நாடும் தமிழின் பெருமையை அறிய வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது.

    * நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்.

    * குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அழைக்கிறேன்.

    * நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி.

    * நான் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது திமுக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

    * காங்கிரசும், திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது.

    * தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது திமுக, காங்கிரஸ் கண்ணீர் வடிக்கிறது.

    * தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் இருந்து உயிரோடு மீட்டுக்கொண்டு வந்தேன்.

    * நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

    * திமுக, காங்கிரஸ் சனாதனத்தை அழிப்பதை பற்றி பேசி வருகிறார்கள்.

    * திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள்.

    * திமுகவும் இந்தியா கூட்டணியும் பெண்களை அவமதிக்கிறார்கள்.

    * தற்போதைய திமுக தலைவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதை வேலூர் மக்கள் அறிவார்கள்.

    * ஜெயலலிதா குறித்து எப்படி எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது மக்களுக்குத்தெரியும்.

    * ஏப்.19-ந்தேதி தமிழகத்தின் பெருமையை காக்க, வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    * உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்.

    * அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன்.

    பெரியோர்களே, எனக்கு ஆசி வழங்குவதற்காக, எனக்கு ஆதரவு தருவதற்காக வந்துள்ள இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.

    Next Story
    ×