என் மலர்

    விளையாட்டு

    உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள்: 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி
    X

    உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள்: 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது
    • காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்

    சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்.

    ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

    கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.

    நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதி சுரேகாவுக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் தனிநபர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறார். .

    கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியில் பிரயன்ஷ் உள்ளார். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்க மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் தீபிகா குமாரி பெண்கள் ரிகர்வ் பிரிவின் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

    Next Story
    ×