என் மலர்

    இந்தியா

    ஆண்டுக்கு ஒரு பிரதமர்: மோடிக்கு பதிலடி கொடுத்த சஞ்சய் ராவத்
    X

    ஆண்டுக்கு ஒரு பிரதமர்: மோடிக்கு பதிலடி கொடுத்த சஞ்சய் ராவத்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.
    • ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமரின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவார்கள். ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.

    தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.

    வரும் ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    Next Story
    ×