என் மலர்

    இந்தியா

    என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி
    X

    என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை: மம்தா பானர்ஜி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    Next Story
    ×