இந்தியா
8 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மை- ஓட்டு போட முடியாமல் தவித்த பெண்: கேரளாவில் வினோதம்
- உஷாவிற்கு இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது.
- பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது வாக்களித்தார். அப்போது அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை கடந்த 8 ஆண்டுகளாக மறையாமலேயே இருந்து வருகிறது. அதற்கு பின் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பிரச்சினை ஏற்படும் என்று கருதி உஷா ஓட்டு போடவே செல்லவில்லை.
அந்த பெண்ணை ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று நடந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்க செல்லவில்லை. ஓட்டு போட முடியாததால் தான் தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story