என் மலர்

    இந்தியா

    அசாம் மாநிலத்தில் கனமழை: நிலச்சரிவால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிப்பு
    X

    அசாம் மாநிலத்தில் கனமழை: நிலச்சரிவால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது
    • அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    தற்போது அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமின் டிமா ஹசாவ் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    மே 4 ஆம் தேதி வரை டிமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதால் அதுவரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 04 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×