என் மலர்

    இந்தியா

    தான் வாங்கும் வாக்குகளுக்கு சமமான மரங்களை நடுவேன்: பெங்கால் நடிகர் அறிவிப்பு
    X

    தான் வாங்கும் வாக்குகளுக்கு சமமான மரங்களை நடுவேன்: பெங்கால் நடிகர் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
    • கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது.

    பெங்கால் சூப்பர் ஸ்டார் தேவ் (தீபக் அதிகாரி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டல் (Ghatal) மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 3-வது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.

    இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரத்த வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப்பெரிய பணி. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ரத்த தானம் செய்வது யாரோ ஒருவருக்கு புதிய வாழ்வு கொடுப்பதாகும்.

    இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம். கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது. ஆகவே, மரங்கள் நடும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். நான் 9 லட்சம் வாக்குகள் பெற்றால், 9 லட்சம் மரங்கள் நடுவேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இவரை எதிர்த்து பா.ஜனதா ஹிரன் சட்டர்ஜி என்ற பெங்கால் நடிகரை களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவில் சிபிஐ தபன் கங்குலியை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×