என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருப்பதாக புகார்: தொழில் அதிபர் வீட்டில் 4.8 கோடி ரூபாய் சிக்கியது
    X

    வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருப்பதாக புகார்: தொழில் அதிபர் வீட்டில் 4.8 கோடி ரூபாய் சிக்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்.
    • காலை முதல் இரவு வரை சோதனை நடத்தப்பட்டதில் பணம் பறிமுதல்.

    நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர்.

    பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×