என் மலர்

    கிரிக்கெட்

    கோப்பையை வென்ற பார்படாஸ் மண்ணை உண்ணும் கேப்டன் ரோகித்- வீடியோ வைரல்
    X

    கோப்பையை வென்ற பார்படாஸ் மண்ணை உண்ணும் கேப்டன் ரோகித்- வீடியோ வைரல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.
    • டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது. 13 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி விளையாடி பார்படாஸ் மைதானத்தில் பிட்சில் உள்ள மண்ணை இந்திய அணியின் கேப்டன் சாப்பிட்டார். பின்னர் பிட்சை தொட்டு வணங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×