என் மலர்

    கிரிக்கெட்

    ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சி- ரோகித் சர்மா
    X

    ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சி- ரோகித் சர்மா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார்
    • இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

    மேலும் 2007-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மீண்டும் 2-வது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த வெற்றியை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 20 - 25 வருடங்களாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபாரமானது. இந்த ஒரே ஒரு கோப்பை மட்டுமே அவருடைய அலமாரியில் தவறி இருந்ததாக நான் கருதுகிறேன். எனவே அவர் கோப்பையை வென்றதற்காக எங்கள் அனைவரது சார்பாக மகிழ்ச்சியடைகிறேன். அவருக்காக நாங்கள் இதை செய்துள்ளோம். தற்போது அவர் எந்தளவுக்கு பெருமையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

    இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும். இதை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார் என்று கூறினார்.

    முன்னதாக எனக்காக வெல்லாமல் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஃபைனலுக்கு முன்பாக ட்ராவிட் சொன்னது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×