என் மலர்

    செய்திகள்

    வியட்நாம்: வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு
    X

    வியட்நாம்: வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படையினர்தெரிவித்துள்ளனர்.
    ஹனோய்:

    தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலியாகினர். 

    இந்நிலையில், மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், ‘ஹோவாபின் பகுதியில் அடுத்தடுத்து குடியிருப்பில் உள்ள 19 பேர் நேற்று அதிகாலை நிலச்சரிவில் சிக்கி புதைந்தனர். இதில் 9 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 317 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

    மொத்தம் 34,000 வீடுகள் சேதமாகியுள்ளன. சுமார் 22,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. ஒரு லட்சத்து 80,000 விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் உள்ள 77 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. நான்கு லட்சத்து 80,000 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×