என் மலர்

    செய்திகள்

    புளூவேல் விளையாட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நாராயணசாமி சந்திப்பு
    X

    புளூவேல் விளையாட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நாராயணசாமி சந்திப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவையில் புளூவேல் விளையாட்டில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண்ணை இன்று காலை சந்தித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி இயல்பு நிலைக்கு மாறும்படி அறிவுரை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புளூவேல் விளையாட்டில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண் பிரியாவின் வீடு உப்பளம் நேதாஜி நகரில் உள்ளது.

    இங்கு இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீரென சென்றார். அவருடன் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், அன்பழகன் ஆகியோரும் சென்றார்கள்.

    அவர்கள் அந்த பெண்ணிடம் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது, பாதிப்பில் இருந்து சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அவருடைய பெற்றோருக்கும் ஆறுதல் கூறிய அவர்கள் மகளுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், அவரை தனிமையில் இருக்க விடக்கூடாது என்று கூறினார்கள்.

    பிரியா இயல்பு நிலைக்கு திரும்ப என்னனென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ? அத்தனை உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக நாராயணசாமி பெற்றோர்களிடம் உறுதி அளித்தார்.
    Next Story
    ×