என் மலர்

    செய்திகள்

    புவனகிரியில் பெண் கொலை: கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
    X

    புவனகிரியில் பெண் கொலை: கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புவனகிரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரா(வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரா, அங்குள்ள அய்யனார் கோவிலில் உள்ள ஒரு சாமி சிலையின் கழுத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சந்திராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, பிரகாஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எங்கள் கிராமத்தில் வசிக்கும் சந்திராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சந்திராவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தேன்.

    இதனால் எனக்கு அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. சந்திராவின் மகள்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்றதும் நான் அவரது வீட்டுக்கு சென்று சந்திராவுடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.

    இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஹரிகரன்(28) என்பவரும் சந்திராவுடன் நெருங்கி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிகரனுடன் சந்திரா அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தது எனக்கு தெரியவந்தது.

    இதனால் அவருடன் உள்ள பழக்கத்தை துண்டிக்குமாறு நான் சந்திராவிடம் பலமுறை தெரிவித்தேன். இருப்பினும் அவர் ஹரிகரனுடன் உள்ள தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு நான் சென்னைக்கு சென்றேன். பின்னர் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பி வந்து, சந்திராவை பார்க்க நினைத்து அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு ஒரு அறையில் சந்திராவும், ஹரிகரனும் உல்லாசமாக இருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த நான் ஹரிகரனை அங்கிருந்து அடித்து விரட்டினேன்.

    அப்போது ஆத்திரத்தில் இருந்த நான் சந்திராவை கொலை செய்ய முடிவு செய்தேன். அவரது மகள்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர் சத்தம் போடாமல் இருக்க சந்திராவின் வாயில் துணியை வைத்து அடைத்தேன்.

    இதையடுத்து அவரை அடித்துக் கொலை செய்தேன். அவர் இறந்ததை உறுதி செய்ததும் சந்திராவின் உடலை அவரது வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோவிலுக்கு கொண்டு சென்றேன்.

    பின்னர் சந்திரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை நம்ப வைக்க முடிவு செய்தேன். அதன்படி அவர் அணிந்திருந்த புடவையை கழற்றி சந்திராவின் கழுத்தில் கட்டினேன். புடவையின் மறுமுனையை கோவிலில் இருந்த சாமி சிலையின் கழுத்தில் கட்டி, அவர் தூக்குமாட்டியது போல கட்டினேன். பின்னர், நான் வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல இருந்தேன்.

    ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

    இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×