என் மலர்

    செய்திகள்

    போட்டியின் இடையே டோனியின் காலை தொட்டு வணங்கிய ரசிகர்
    X

    போட்டியின் இடையே டோனியின் காலை தொட்டு வணங்கிய ரசிகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மொகாலியில் நடைபெற்ற நேற்றைய போட்டியின்போது டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் அவரது காலை தொட்டு வணங்கினார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. பின்னர் 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் டோனி விளையாடி வருகிறார். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு கிரிக்கெட்டின் கடவுளாக டோனியை ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.



    நேற்றைய போட்டியில் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ரசிகர் தடுப்புச் சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தா். அவர் டோனியை நோக்கி ஓடி, அவரது காலை தொட்டு வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு வீரர் விரைவாக வந்து அந்த ரசிகரை அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×