என் மலர்

    செய்திகள்

    ஜாலி துறைமுக கடற்கரையில் ஜாலியாக விளையாடும் டோனி மகள், தவான் மகன்
    X

    ஜாலி துறைமுக கடற்கரையில் ஜாலியாக விளையாடும் டோனி மகள், தவான் மகன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெஸ்ட் இண்டீஸ் ஆன்டிகுவா துறைமுக கடற்கரையில் டோனி மகன் ஷிபா, தவான் மகன் ஷோராவர் பாண்ட் ஆகியோர் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்தனர்.
    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    முதல் இரண்டு போட்டிகள் டிரினிடாட்டில் நடைபெற்றது. 3-வது மற்றும் 4-வது போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி 30-ந்தேதியும், 4-வது போட்டி ஜூலை 2-ந்தேதியும் நடக்கிறது.

    25-ந்தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆட்டத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி ஆன்டிகுவா புறப்பட்டது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் தவான் ஆகியோர் தங்களை குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளனர்.

    டோனி மற்றும் தவான் ஆகியோர் மனைவி தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். இந்திய அணி ஆன்டிகுவா சென்றதும் டோனி மகள் ஷிவா, தவான் மகன் ஷொராவர் பாண்ட் ஆகியோர் ஜாலி ஹார்பர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஜாலியாக கடற்மணலில் விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். இதை படம்பிடித்து டோனி மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×