என் மலர்

    செய்திகள்

    காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
    X

    காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாந்திபோரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாந்திபோரா மாவட்டத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது. பாக்தோர் பகுதியில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் எல்லை கோட்டுப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 3 ராணுவ வீரர்கள் பனியில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பாக்தோர் பகுதியில் 5 அடி உயரத்திற்கு பனி உறைந்து காணப்படுகிறது.

    இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீரில் மழை போன்று பனி கொட்டியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×