செய்திகள்
ஒடிசா: வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இல்லாமல் சிலர் பட்டாசு தயாரித்து வந்தனர். நேற்று காலை அந்த வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே, வெடி விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல் பிரதான்(20), நந்தி நி பிரதான் (9), ராம்பாடா மெதி (29) உள்பட 5 பேர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து, வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்தை தொடர்ந்து, மாவட்ட போலீசார் இன்று அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் படடாசுகளை அழித்தனர்.
ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இல்லாமல் சிலர் பட்டாசு தயாரித்து வந்தனர். நேற்று காலை அந்த வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே, வெடி விபத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல் பிரதான்(20), நந்தி நி பிரதான் (9), ராம்பாடா மெதி (29) உள்பட 5 பேர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து, வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்தை தொடர்ந்து, மாவட்ட போலீசார் இன்று அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் படடாசுகளை அழித்தனர்.
Next Story