செய்திகள்
காஷ்மீரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது: பாதுகாப்பு படை அதிரடி
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகள் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் யூனிஸ் அகமது மிர் மற்றும் தாஹிர்-உல்-இஸ்லாம் ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகள் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் யூனிஸ் அகமது மிர் மற்றும் தாஹிர்-உல்-இஸ்லாம் ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story