என் மலர்

    செய்திகள்

    ஊரணிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஊரணிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவோணம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திருவோணம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராசு தலைமை வகித்தார். கறம்பக்குடி வடக்கு ஒன்றியச்செயலாளர் த.அன்பழகன், கறம்பக்குடி தெற்கு ஒன்றியச்செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, கந்தர்வக் கோட்டை ஒன்றியச் செயலாளர் ஜி.ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், தஞ்சை மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பக்கிரிசாமி, சின்னை.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் கே.ராமசாமி, புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசுகையில்:

    ஊரணிபுரத்தில் இருதரப்பினர் இடையே சமாதானம் செய்யச்சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வாசுவின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

    காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் களத்தில் இறங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராடும் என பேசினார்.

    தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.மனோகரன், பி.எஸ்.பாலசுப்பிரமணியன், சாமி.நடராஜன், மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, தஞ்சை மாவட்ட ஒன்றியச்செயலாளர்கள் ஒரத்தநாடு என்.சுரேஷ் குமார், சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

    Next Story
    ×