செய்திகள்
கல்பாக்கம் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
கல்பாக்கம் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 45). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 மீனவர்களுடன் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். அப்போது ராட்ச அலை மோதியதில் படகு கவிழ்ந்தது. இதில் ஸ்டாலின் கடலில் மூழ்கினார். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
மாயமான ஸ்டாலினை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கூவத்துரை அடுத்த கடலூர் சின்னக்குப்பம் முகத்துவாரத்தில் ஸ்டாலின் உடல் கரை ஒதுங்கியது. சதுரங்கப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story