செய்திகள்
கேபிள் டி.வி.ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
ஆறுமுகநேரியில் கேபிள் டி.வி.ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர்:
ஆறுமுகநேரி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் கிரேபன் (வயது 21). இவர் கேபிள் டி.வி. ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென்று அவருடைய கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து, திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் திருச்செந்தூரை அடுத்த சண்முகபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (18) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகன் கிரேபன் (வயது 21). இவர் கேபிள் டி.வி. ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென்று அவருடைய கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து, திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் திருச்செந்தூரை அடுத்த சண்முகபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (18) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story