என் மலர்

    செய்திகள்

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: விவசாயி பலி
    X

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: விவசாயி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலியானார்.
    பாகூர்:

    பாகூர் அருகே கரையாம்புத்தூர் லோகு நகர் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 60). விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அதே பகுதியில் உள்ள கடைத் தெருவுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது திருச்சியை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் தினேஷ் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாரங்கபாணி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சாரங்கபாணி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சாரங்க பாணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று அதிகாலை சாரங்கபாணி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×