சினிமா
ரஜினியும், கமலும் எனது இரு கண்கள் - கவிஞர் வைரமுத்து பேட்டி
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் எனது இரு கண்கள் போன்றவர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Vairamuthu
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் எனது இரு கண்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
ராஜபாளையம் - தென்காசி சாலையில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம், ‘ரஜினி அரசியல் பிரவேசம் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அடிக்கடி கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டது குறித்தும் கேட்ட போது, இருவரும் எனது நண்பர்கள், மேலும் இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி கருத்து கூற அவகாசமான காலம் இல்லை. இன்னும் காலம் வேண்டும்’ என்றார். #Rajinikanth #KamalHaasan #Vairamuthu
Next Story