என் மலர்

    சினிமா

    தீபிகா தலைக்கு ரூ.10 கோடி பரிசு: ஜிஎஸ்டி உண்டா? பிரகாஷ் ராஜ் கிண்டல்
    X

    தீபிகா தலைக்கு ரூ.10 கோடி பரிசு: ஜிஎஸ்டி உண்டா? பிரகாஷ் ராஜ் கிண்டல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பத்மாவதி படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ10 கோடி பரிசு அளித்திருப்பதற்கு ஜி.எஸ்.டி உண்டா என்று நடிகர் பிரகாஷ் கிண்டல் அடித்துள்ளார்.
    ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதில் பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து இருப்பதால் எதிர்ப்பாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

    ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோனே டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோனேவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

    லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது. அவரது தலைக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் சிலர் அறிவித்துள்ளனர்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு, தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார். தொடர் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோனே அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீபிகா, பன்சாலிக்கு மிரட்டல் விடப்பட்டிருப்பதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    நடிகை, இயக்குனர் தலைக்கு ஒருவர் ரூ.5 கோடி விலை அறிவிக்கிறார், இன்னொரு கட்சி பிரமுகர் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கிறார். பணமதிப்பிழப்புக்கு பிறகும் இவ்வளவு பெரிய தொகைகளை பரிசாக அவர்களால் எப்படி அறிவிக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    சரி அதற்கு ஜிஎஸ்டி உண்டா? இதை ஜோக்கிற்காக கேட்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.

    பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ள கமெண்ட்டுக்கு நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்திருக்கின்றனர். பிரகாஷ்ராஜ் வருமான வரி ரெய்டுக்கு தயாராக இருக்க வேண்டும், ஆந்திராவில் உள்ள பண்னை வீட்டில் இருக்கும் வரைதான் அவருக்கு பாதுகாப்பு... என்று பதிவிட்டு உள்ளனர்.
    Next Story
    ×