சினிமா
‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு: ராக்கி சாவந்த்துக்கு செல்போனில் மிரட்டல்
‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்த தனக்கு செல்போனில் மிரட்டல் அழைப்புகள் வருவதாக நடிகை ராக்கி சாவந்த் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தி திரைப்படமான ‘பத்மாவதி’, 14-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராணி பத்மாவதி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.
ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு மும்பையை சேர்ந்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளதை கண்டித்து அவரது செல்போனுக்கு மர்ம ஆசாமிகளிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் பலர் அவருக்கு ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பி உள்ளனர்.
தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாச குறுந்தகவல்கள் வருவது குறித்து நடிகை ராக்கி சாவந்த் மும்பை கோரேகாவ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் அடையாளம் தெரியாத ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு மும்பையை சேர்ந்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளதை கண்டித்து அவரது செல்போனுக்கு மர்ம ஆசாமிகளிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் பலர் அவருக்கு ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பி உள்ளனர்.
தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாச குறுந்தகவல்கள் வருவது குறித்து நடிகை ராக்கி சாவந்த் மும்பை கோரேகாவ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் அடையாளம் தெரியாத ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story