என் மலர்

    சினிமா

    ஆரி நடிப்பில் உருவாகும் மௌன வலை
    X

    ஆரி நடிப்பில் உருவாகும் மௌன வலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெடுஞ்சாலை படம் மூலம் பிரபலமான நடிகர் ஆரி, அடுத்ததாக மௌன வலை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
    ‘நெடுஞ்சாலை’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தரணி’, ‘மாயா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ படம் உருவாகி உள்ளது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆரி. இவர் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘மௌன வலை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இதில் ஆரிக்கு ஜோடியாக ஸ்மிருதி நடிக்க இருக்கிறார்.

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா ஆகியோர் நடிக்கிறார்கள். "களம்" படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×