என் மலர்

    சினிமா

    ‘சண்டைகோழி-2’ படத்துக்காக சென்னையில் உருவாகும் மதுரை
    X

    ‘சண்டைகோழி-2’ படத்துக்காக சென்னையில் உருவாகும் மதுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் ‘சண்டைகோழி-2’ படத்திற்காக சென்னையில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.
    விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் ‘சண்டை கோழி-2’. இப்படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், படப்பிடிப்புக்காக அழகான மதுரையை ரூ.6 கோடி செலவில் சென்னையில் அமைக்கிறார்கள்.

    இந்த பிரம்மாண்டமான செட் சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. அதில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

    இதற்கான பூஜை, பின்னனி மில்லில் நடந்தது. இதை விஷால் பிலிம் பாக்டரி இணை தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர் என்.லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    Next Story
    ×