சினிமா
மானியம் ரத்துக்கு பதிலாக அமைச்சர்களின் சலுகைகளை ரத்து செய்லாமே: கஸ்தூரி கருத்து
மக்களை பாதிக்கும் மானிய ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யலாமே என்று கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவ்வப்போது அரசியல் கருத்துகளை தெரிவிப்பதுபோல நடிகை கஸ்தூரியும் சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
நடிகை கஸ்தூரி டுவிட்டர் மூலம், “ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில்,
ரேஷன் கட்டு, கியாஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு
மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு
மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. விளங்கும். இம்சை அரசன்.
என்று கேலியாக குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை கஸ்தூரி டுவிட்டர் மூலம், “ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில்,
ரேஷன் கட்டு, கியாஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு
மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு
மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. விளங்கும். இம்சை அரசன்.
என்று கேலியாக குறிப்பிட்டு உள்ளார்.
Next Story