என் மலர்

    சினிமா

    `கோலி சோடா 2 படக்குழுவில் இணைந்த தேசிய விருது நடிகர்
    X

    `கோலி சோடா 2' படக்குழுவில் இணைந்த தேசிய விருது நடிகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தில் தேசிய விருது வென்ற நடிகர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', `கோலிசோடா', `பத்து என்றதுக்குள்ள' `கடுகு' உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

    அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `கோலிசோடா'. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம், அனைவராலும் பாராட்டும்படி இருந்தது. இந்நிலையில், `கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்பத்தை ரஃப் நோட் படநிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இப்பத்தில் தேசிய விருதினை வென்ற நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமுத்திரக்கனி இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×