என் மலர்

    சினிமா

    நடிகர் திலீப்புக்கு நீதிமன்றக் காவல்: அங்கமாலி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    X

    நடிகர் திலீப்புக்கு நீதிமன்றக் காவல்: அங்கமாலி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை ரத்து செய்து, அடுத்த வாரம் வரை திலீப்பை நீதிமன்றக் காவலில் வைக்க அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கடந்த 10-ந்தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    திலீப்பை போலீசார் உடனடியாக அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து அவர் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். திலீப்புக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென போலீசார் அங்கமாலி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் 2 நாள் மட்டும் திலீப்பை விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். திலீப்புக்கு ஜாமீன் கேட்டு போடப்பட்ட மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.



    போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டதும் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முக்கிய ஹோட்டல்களில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர். இதையடுத்து 2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று மீண்டும் அங்கமாலி கோர்ட்டில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது திலீப்புக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை முடிவடையாததால் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செயயப்பட்டது. இதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். நடிகர் திலீப்பை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததால், போலீசார் திலீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



    இன்றும் திலீப் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை நிராகரித்த நீதிபதிகள், திலீப்பை வருகிற ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×