சினிமா
தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர். அந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர். அந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Next Story