என் மலர்

    சினிமா

    கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
    X

    கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நமது நாட்டில் கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது. விவசாயிகளால் ஆடை கட்ட முடியாத அளவுக்கு அவர்களது நிலைமை உள்ளது என்று கோவை விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார்.
    ‘வெள்ளை வெளிச்சம்’ என்ற தலைப்பில் வள்ளலார் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. விழாவில் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:-

    கொங்கு மண்டலம் தமிழுக்கு தங்க மண்டலமாகவும், சன்மார்க்க நெறி வளர்க்கும் மண்டலமாகவும் திகழ்கிறது. இந்த தலைமுறை மக்கள் திரைப்படங்களை, செல்போன் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் இலக்கியங்களை படிப்பதில் ஆர்வம் குறைந்தவர்களாக உள்ளனர். காதலர்கள் கூட 4 வரி காதல் கவிதைகளைத்தான் விரும்புகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் இந்த சமுதாயத்தில் ஆழ்ந்து வாசிக்கும் திறனில் ஆர்வம் செலுத்துவதில்லை.

    வள்ளலார் மனித சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் ஜாதி கூடாது என்றும், உருவ வழிபாடு கூடாது என்றும் கூறினார். வள்ளலாரின் குரல் சத்தியத்தின் குரல். இப்போது ஜாதி ஒழிந்து இருக்கிறதா? என்றால் இல்லை. இந்த நவீன உலகிலும் அது அதிகரித்துதான் இருக்கிறது. நரபலி செய்து பிழைக்கும் கூட்டமும், அதனை நம்புகிற கூட்டமும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.


    கோவை கொடிசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியபோது எடுத்த படம்.

    வாடிய பயிர்களை கண்டு வாடியதாக வள்ளலார் கூறினார். இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் தார்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்கள் ஆடையில்லாமல் சென்றதாக கூறினார்கள். தங்களால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதற்காகவே விவசாயிகள் அவ்வாறு சென்றுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம். இந்த நாட்டில் கொடிக்கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது. ஆனால் விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு விவசாயிகளின் நிலைமை உள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் கல்வி மையங்களில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகள் தமிழ்மொழியில் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்பினால், யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது. தாய் மொழி இறையாண்மையை காப்பாற்றினால்தான் உள்ளூர் கலாசாரத்தை காப்பாற்ற முடியும். இது ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தும். எனவே ‘தமிழ் படித்துவிட்டுத்தான் எந்த மொழியையும் படிப்போம்’ என்ற உறுதி மொழியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

    நமது நாடு பல நூற்றாண்டுகளாக ரத்தங்களால் நனைந்து, சிவந்து, சிதறி கிடந்தது. வள்ளலாரின் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதனையும் பண்படுத்தும்.

    இவ்வாறு வைரமுத்து கூறினார்.
    Next Story
    ×