என் மலர்

    சினிமா

    மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் கோரி மனு
    X

    மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் கோரி மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் கோரி சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    அமெரிக்க இந்தியரான ஆதிநாராயணன் என்பவரிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ், நடிகர் வாலி என்ற பசீர் உள்பட 7 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் ரித்தீஷ் முன்ஜாமீன் கேட்டு சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ரித்தீசுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதன்பின்பு, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
    Next Story
    ×