என் மலர்

    சினிமா

    கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்: ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா?
    X

    கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்: ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு அடுத்த வாரத்தில் வெளியாகும் `பாகுபலி-2' டிரைலர் மூலம் பதில் கிடைக்குமா என்பதை கீழே பார்ப்போம்.
    பிரம்மாண்டமாக தயாராகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. குறிப்பாக  `பாகுபலி' முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை  கட்டப்பா கொல்வது போன்ற காட்சிக்கு விடை அதன் அடுத்த பாகத்திலேயே  இருப்பதால் `பாகுபலி-2' மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா,  தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே  உருவாகி உள்ள இந்த படம் அதீத வசூலை குவிக்கும் என்பதில் மாற்றமில்லை.


     
    இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில்  மாலை 5 மணியளவில் இணையதளத்தில் வெளியாகிறது. எனவே வருகிற மார்ச் 16-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் மூலம் கட்டப்பா,  பாகுபலியை ஏன் கொன்றார் என்ற உண்மை வெளிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Next Story
    ×