என் மலர்

    சினிமா

    ‘மஸ்காரா’ அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்
    X

    ‘மஸ்காரா’ அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளம் பாடலாசிரியர் ஒருவர் ‘மஸ்காரா’ பாடலில் குத்தாட்டம் போட்ட அஸ்மிதாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தில் ‘மஸ்காரா போட்டு அசத்துறியே’ என்ற பாடலில் குத்தாட்டம் போட்டவர் அஸ்மிதா. இவர் தற்போது புதுமுகங்கள் சபா, லுப்னா அமீர், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கேக்கிறான் மேய்க்கிறான்’ படத்திலும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

    இப்படத்தில் ‘புத்தனுக்கு போதிமரம், எனக்கு நீதான் போதை மரம்’ என்று தொடங்கும் இந்த பாடலில் அஸ்மிதா நடனமாடியதும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தணிக்கை குழு இந்த பாடலை பார்த்து, பாடலில் இருந்த ‘புத்தனுக்கு போதி மரம்’ என்ற வரியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதையடுத்து, இசையமைப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து அந்த வரியை ‘மாமனுக்கு அத்தை மரம்’ என்று அந்த பாடலின் முதல் வரியை மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள்.



    இது இந்த பாடலை எழுதிய முருகன் மந்திரத்திற்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறதாம். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புத்தனுக்கு போதி மரம்’ என்ற வரி, ‘மாமனுக்கு அத்தை மரம்’ என்று மாறியதில் வருத்தம்தான். ஒருவேளை என் வரிகளைவிட ‘மஸ்காரா’ அஸ்மிதா போட்ட ஆட்டம்தான் வரியை மாற்ற காரணமாக இருந்திருக்குமோ? என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்தளவுக்கு அஸ்மிதாவை ஆட்டம் போட வைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் போஸ்.

    இந்த பாடலில் புத்தன் இல்லாத குறையை ‘எங்கேயும் நான் இருப்பேன்’ படத்தில் இசையமைப்பாளர் ராம் இசையில், நான் எழுதி, விஜய் யேசுதாஸ் பாடியுள்ள ‘காற்றோடு தீபம் ஆடுதே’ பாடல் தீர்த்து வைத்துவிட்டது. மிக மென்மையான மெலடியான ‘காற்றோடு தீபம் ஆடுதே’  பாடலில், ஒரு சரணத்தில்... “பூக்கள் இல்லை என்றால் வாசம் இல்லையா? புத்தன் இல்லை என்றால் ஆசை இல்லையா? என்று எழுதி இருப்பதில் மகிழ்ச்சி என்றார், முருகன் மந்திரம். 
    Next Story
    ×