சினிமா
சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம்: நடிகர் மனோபாலா மீது கமிஷனரிடம் புகார்
சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம் செய்ததாக நடிகர் மனோபாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சினிசரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நடிகராகவும் உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story