என் மலர்

    சினிமா

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி
    X

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளித்துள்ளது. அதிருப்தியாளர்கள் எதிர்ப்பால் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன் வண்ணன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தவறாது கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால் சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் நடிகர்கள், நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 3,500 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

    தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுபோல் நடிகர் சங்கம் எதிரில் புதிய நிர்வாகிகளை கண்டித்து சமீபத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய அதிருப்தியாளர்களுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    லயோலா கல்லூரி வளாகத்தில் பொதுக்குழு நடத்த அனுமதி கேட்டு நடிகர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிருப்தி கோஷ்டியினர் பொதுக்குழுவை அந்த கல்லூரி வளாகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்கள்.

    நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் சட்டரீதியாக அனுமதி பெற்று பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் சூழ்நிலை இருப்பதால் மோதல் உருவாகலாம் என்றும் அதற்கான பாதுகாப்புக்கு உகந்த இடமாக அந்த பகுதி இல்லாததால் பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதனால் அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா? என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் நடிகர் சங்க பொதுக்குழுவை லயோலா கல்லூரி வளாகத்தில் நடத்த போலீஸ் அனுமதி அளித்து நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பொதுக்குழு நடைபெறும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பொதுக்குழுவில் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல், அதிருப்தியாளர்கள் பிரச்சினை, நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
    Next Story
    ×