சினிமா
விஜய் சேதுபதியைத் தொடர்ந்து சுருதிஹாசனுக்கு அம்மாவான ராதிகா
'எஸ் 3' படத்தில் நடிகை சுருதிஹாசனுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள 'தர்மதுரை' படத்துக்கு ராதிகாவின் அம்மா வேடம் கதைக்கு தூணாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் அடுத்து சூர்யா நாயகனாக நடித்து வரும் 'எஸ்-3' படத்தில் சுருதிஹாசன் அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார்.ராதிகாவின் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் இயக்குனர் ஹரி அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
எந்தவிதமான கதாபாத்திரம் என்றாலும் அப்படியே மாறி விடும் திறமையான நடிகைகளில் ராதிகாவும் ஒருவர்.இதனால் ராதிகா தங்கள் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று பெரும்பாலான இயக்குனர்கள் விரும்புகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’, ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘தர்மதுரை’ படங்களை தொடர்ந்து இப்போது ‘எஸ்-3’ படத்திலும் ராதிகா அம்மா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story