என் மலர்

    சினிமா

    நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறும் ரிக்‌ஷாக்காரன்
    X

    நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறும் ரிக்‌ஷாக்காரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எம்ஜிஆர் - மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்த 'ரிக்‌ஷாகாரன்' படம் டிஜிட்டலில் மாற்றப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் வெளியாக உள்ளது.
    இன்றும், என்றும், என்றென்றும் தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'ரிக்‌ஷாக்காரன்' படம்தான். அதிரடி, காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்ளும் நிறைந்த 'ரிக்‌ஷாக்காரன்', தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் 'பாரத்' பட்டத்தையும் பெற்று தந்தது.

    கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது. சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த 'ரிக்‌ஷாக்காரன்' படத்தின் டிஜிட்டல் பதிப்பை 'குவாலிட்டி சினிமா' நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் 'பிலிம் விஷன்' நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்

    'ரிக்‌ஷாக்காரன்' படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் 'ரிக்‌ஷாக்காரன்' படத்தின் இசையமைப்பாளர் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். அதுமட்டுமின்றி இந்த படத்தில்தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கிருஷ்ணன் நாயர் இயக்கியிருந்தார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடவிருக்கின்றனர். அந்த விழாவின் முதற்கட்டமாக 'ரிக்‌ஷாக்காரன்' படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறார்கள். இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். 
    Next Story
    ×