என் மலர்

    சினிமா

    5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி?
    X

    5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்த்தி கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த படம்? என்பதை கீழே பார்ப்போம்...
    கார்த்தி கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சிறுத்தை’. இப்படத்தில் அவர் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும் இதுவரை அவர் எந்த படத்திலும் போலீஸ் வேடத்தில் நடிக்கவில்லை.

    இந்நிலையில், தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    கார்த்தி தற்போது ‘கஷ்மோரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்தகையோடு, வினோத்குமார் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×