என் மலர்

    நீங்கள் தேடியது "போஸ்டர்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.

    சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் புதி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் சீயான் விக்ரம் டி.வி.எஸ் வண்டியில் மளிகை பொருட்கள்  மற்றும் காய்கறிகளுடன் வண்டியை ஓட்டுகிறார். படத்தின் நாயகியான துஷரா விஜயன் வண்டியில் முன்னாடி  உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக சிரித்துப் பேசியபடியுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.

    பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு முதல் படத்திலேயே திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வாயாடி பெண்ணாக படத்தில் அவர் நடித்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. உடல் கவர்ச்சியை காட்டாமல் வசீகரம் கலந்த முகத்துடன் உள்ள அவரது நடிப்பு மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகங்களில் பேசப்படும் வகையில் அமைந்தது.

    அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. நிதேஷ் திவாரி இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் தண்டேல் படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்தது அந்த வகையில் அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் செய்கிறார்.

    சிவகார்த்திகேயேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்திய ராணுவப் படை வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
    • விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.

    இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா .
    • பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

     2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

    அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது
    • இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.

    இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நடிகர் சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி இன்று அவரது சிறப்பு போஸ்டரை இந்தியன் 2 படக்குழு வெளியிட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.

    'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்ற புது போஸ்டரை சீயான் விகரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவரின் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும் வெளியே தெரிகிறது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
    • இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

    எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.
    • மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை புகைப்பட 'போஸ்டர்' மூலம் விளக்குவதாக அமைந்துள்ளது.


    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.




    இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

    இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் 'இந்தியன் - 2' படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் 2- ந்தேதி "இந்தியன் 2" படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.




    இந்நிலையில் கமலின் 'இந்தியன் 2 ' படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று தமிழ் புத்தாண்டை யொட்டி சிறப்பு 'போஸ்டர்' வெளியிட்டுள்ளனர்அந்த புதிய போஸ்டரில் இரட்டை வேடத்தில் கமல் நடிக்கும் கதாபாத்திரத்தின் பிரேம்கள் காட்டப்பட்டுள்ளன.

    அதில் கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.

    "இந்தியன்-2 ல் மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை இந்த புகைப்பட 'போஸ்டர்' மூலம் நமக்கு விளக்குவதாக  அமைந்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத்.
    • ஒரு ஹைப்பர் லிங்க் படமாக உருவாகியுள்ளது

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு  உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக ' கொடுத்து உள்ளது.
    • வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

    பிரபல மலையாள நடிகை பார்வதி. 2006- ம் ஆண்டு 'அவுட் ஆப் தி சிலபஸ்' எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாள முன்னணி நடிகையான பார்வதி 2008- ல் தமிழில் 'பூ' படத்தில் நடித்தார்.

    மேலும் 'சென்னையில் ஒரு நாள்', மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ' தங்கலான்' படத்தில் பார்வதி நடித்து வருகிறார். 

    இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார்.




    சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது.

    இதை யொட்டி மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்து உள்ளது.

    மேலும் நடிகை பார்வதி பிறந்தநாளை யொட்டி ஏராளமான ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த். பின் பல முன்னணி படங்களில் நடித்து இருக்கிறார்.

    தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்பொழுது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரஷாந்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் குழு சார்பாக வாழ்த்தி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    • தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

    இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    ×