என் மலர்

    நீங்கள் தேடியது "எழுத்தாளர்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் ராபர்ட் பிகோ மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
    • துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பிரேக்:

    மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்தார். அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது பிரதமர் ராபர்ட் பிகோ மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த நபர் 5 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராபர்ட் பிகோ சுருண்டு விழுந்தார். உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த பிரதமர் ராபர்ட் பிகோவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு வயிறு மற்றும் மூட்டு பகுதியில் குண்டு பாய்ந்து இருந்தது.

    இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோ ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து துணைப் பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டோமஸ் தாராபார் கூறும்போது, `இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை நன்றாக இருந்தது. இந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இல்லை. நிச்சயமாக அவர் உயிர் பிழைத்து விடுவார்' என்று நினைக்கிறேன் என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர் 71 வயதான எழுத்தாளர் என்றும், அவர் துஹா என்ற இலக்கியக் கழகத்தின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லெவிஸ் நகரைச் சேர்ந்த அவர் ஸ்லோவாக் எழுத்தாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே உள்துறை மந்திரி கூறும்போது, `பிரதமர் மீதான படுகொலை முயற்சியின் பின்னணியில் தெளிவான அரசியல் உள்நோக்கம் இருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்
    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் டீசரை இயக்குநர் லிங்குசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியது. தமிழ்நாடு வசூலில் ரூ.15 கோடியை தாண்டியது.

    வெகுஜன மக்களால் இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் கமல், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த் போன்ற பல முன்னணி பிரபலங்களால் பாராட்டு பெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து துனுஷை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவல்கள் வெளியானது.

    எல்லாரும் புகழ்ந்து தள்ளிய இப்படத்தை "எனக்கு பிடிக்கவே இல்லை .. எரிச்சலூட்டும் படமாக இருந்தது" என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர்," தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள்.

    குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

    மேலும்," மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது எனவும், அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால் அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

    கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சனம் சமூக வலை தளங்களில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பலர் ஜெயமோகன் கூறியது சரிதான் என்றும், பலர் அவர் கூறுயதை மறுத்தும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.




     




     


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளையோா் கலை விழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
    • சான்றிதழ், பரிசு மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் தஞ்சாவூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தஞ்சாவூா் வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் கலைஞா் (ஓவியம்), இளம் எழுத்தாளா் (கவிதை), புகைப்படம், பேச்சுப்போட்டி, இளை யோா் கலை விழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்ப டவுள்ளன.

    போட்டிகளில் தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த 15 - 29 வயதுடைய இளையோா் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    வெல்வோருக்கு சான்றிதழ், பரிசுகளும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும். ஒரு நபா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    பங்கேற்க விருப்பமு ள்ளோா் விண்ணப்பத்தை நிறைவு செய்து துணை இயக்குநா், நேரு யுவகே ந்திரா, அரசு இளைஞா் விடுதி, கணபதி நகா், மருத்து வக்கல்லூரி சாலை என்ற முகவரியில் நேரடியாகவோ, dyc.thanjavur@ gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ நாளைக்குள் (செவ்வாய் கிழமை) அளிக்க வேண்டும்.

    மேலும், விவரங்களுக்கு 94436-87794 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை நேரு யுவ கேந்திராவின் தஞ்சாவூா் மாவட்டத் துணை இயக்குநா் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.
    • அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

    புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இது ஒரு பேரழிவு தரும் இழப்பு. அத்தகைய அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் முடியும்" என்று குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.
    • எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-

    எல்லோராலும் எழுதிவிட முடியாது. எழுத்து மிகப்பெரிய தவம். நாம் உணர்ந்தவற்றை தெளிவாகவும், பிழையின்றியும் சொல்ல வேண்டும். சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.

    ஒருநாள் பயிற்சி செய்தால் சைக்கிள் பழகிவிடலாம். ஒரு வாரம் முயற்சித்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டலாம். ஓராண்டு ஒரு துறையில் நிலைத்திருந்தால்அத்துறையில் வல்லுனராகலாம்.ஆனால் எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எழுத்தாளரை கவுரவிப்பது என்பது, சமுதாய அக்கறையாளரை கவுரவிப்பதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran
    சென்னை:

    இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

    தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.

    பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Balakumaran #RIPBalakumaran
    ×